இந்தத் தொகுப்பில் கவிதைகளின் வழியாக மஞ்சள் நிலாக்களை அள்ளிவரும் சிறுமிக்கு நான் மெஹருன்னிஷா எனப் பெயர் சூட்டிக்கொள்கிறேன். அந்தச் சிறுமி உங்களுக்குள் இருக்கும் மெஹருன்னிஷாவை உயிர்ப்பிக்கச் செய்வாள். தகுந்த பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள்.
உயிர்ப்பிக்கச் செய்வாளா இந்தச் சிறுமி என்பதே உங்கள் கேள்வியாக இருக்கக் கூடும். உயிர்ப்பிக்கச் செய்வாள் என்பதே என் உறுதியான பதில். சின்ன வயசில் “உயிர் கொடுத்தல்” விளையாடியிருக்கிறீர்களா? கவிதை என்பதும் ஒரு வகையில் உயிர் கொடுத்தல் விளையாட்டு தானே.
தோழமைக் கவிஞன் முருகானந்தத்துக்கு விளையாடத் தெரிகிறது. அடுத்தடுத்தும் நன்றாக விளையாடுவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வாழிய!
நாணற்காடன்
அணிந்துரையிலிருந்து..
மஞ்சள் நிலாக்களை அள்ளிவரும்சிறுமி (MANJAL NILAAKKALAI ALLIVARUM SIRUMI)
₹100.00Price